Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Tuesday, December 09, 2008

திருக்குறளும் கலைஞர் மற்றும் மு.வ உரையும்

இன்னிக்கு நான் கவிதாலயா பேனர் வழங்கும் திருவண்ணாமலை ட்ரைலர் பார்த்தேன்...அதுல ஆரம்பத்துல வர "அகர முதல எழுத்தெல்லாம்" பாத்து கேட்டதும் எனக்கு பழைய ஞாபகம் வந்து எல்லா கடவுள் வாழ்த்து குரளையும் ஞாபகப்படுத்த முயன்றேன்...ஒரு ஆறு குறள் வரிசையாக ஞாபகம் வந்தது...சரியென்று நம்ம கூகிளாண்டவர்கிட்ட கேட்டேன்...ஏகப்பட்ட வலை குரளுக்கென்று இயங்கி வருகிறது...அதில் முக்கியமானது தலைவர் கலைஞர் உரை...
நான் பள்ளியில் படிக்கும் பொது திருக்குறள் படிக்க மு.வரதனாசனார் உரை தான் வாங்கி படிப்போம்...அதுதான் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்...நான் கலைஞர் உரை இதுவரை படித்ததில்லை...சரி என்று இதை படித்தால்..எனக்கு என்னவோ மூ.வ உரைதான் மூ.க உரையைவிட எளிதாக இருக்கிறது என்பது என எண்ணம்....நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அதை பின்னோட்டத்தில் சொல்லுங்களேன் :)))
பி.கு. இது சும்மா யாருக்கு என்ன உரை பிடிக்கும் என்பதை தெரிந்துகொள்ள மட்டும்தான்.வேறு எந்த உள்நோக்கமும் இதற்கு இல்லை...அதனால் என கொண்டையை யாரும் தேடவேண்டாம்..அது இருக்குக்கவேண்டிய இடத்தில் பத்திரமாக உள்ளது...