Saturday, July 28, 2012

Tuesday, March 06, 2012

The Descendants (2011) - English


George Clooney, இவர தெரியாத ஹாலிவுட் ரசிகர்களே இருக்க முடியாது. ஆர்பாட்டம் இல்லாம நடிக்கறதுல மன்னன். இந்த படம் மட்டும் என்ன விதிவிலக்கா??சும்மா பிச்சு உதறிருக்கார் மனுஷன்.


அப்படி என்னதான்யா கதை???


Matt King (க்ளூனி), ஹவாய் மாகானத்துல இருக்குற  Honolulu  அப்படின்ற ஒரு கடற்கரை நகரத்துல வாழற ஒரு வக்கீல். இவருடைய குடும்பம் ஒரு பாரம்பரியமான மன்னர் குடும்பம். அந்த வகைல இவர் குடும்பத்துக்கு 25000 ஏக்கர் நிலம் Kaua'i என்ற ஊருல கடலுக்கு பக்கத்துல இருக்கு. அந்த நிலத்தோட trustee இவருதான். ஆனா இவருடைய Cousins கொஞ்சம் பேரு இருக்காங்க அவங்க அனுமதி இல்லாம இவரால தனியா எந்த முடிவும் எடுக்க முடியாது. இவருடைய மனைவி Elizabeth அப்புறம் Alexandra , Scottie ன்னு ரெண்டு பொண்ணுங்க. இவருக்கும் இவரோட மனைவிக்கும் தகராறு. அதனாலேயே இவரு குடும்பத்தோட ஒரு ஒட்டுதல் இல்லாமையே இருக்காரு. இந்த சமயத்துல Elizabeth க்கு ஒரு விபத்துல தலைல அடிபட்டு நினைவிழந்து கோமால இருக்காங்க. அப்போத்தான் இவரோட பெரிய பொண்ணு மூலமா Elizabeth க்கும் அதே ஊருல இருக்கும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் Brian Speer க்கும் தொடர்பு இருந்தது தெரிய வருது. அதுக்கு அப்பறம் இவரு என்ன செஞ்சாரு, அவங்க மனைவி உயிர் பிழைச்சு வந்தாங்களா அப்படீங்கறத நீங்க டவுன்லோட் பண்ணியோ தியேட்டர்ல போய் பார்த்தோ தெரிஞ்சுகோங்க.


க்ளூனி, மணவாழ்க்கையில் தோல்வி அடைஞ்ச மனைவியால் ஏமாற்றப்பட்ட கணவன், பொறுப்பான அப்பா என ரெண்டு விதமான கேரக்டர். தன்னோட கோவத்த மகள்கள் கிட்ட காட்டாம அவங்க செய்வதை எல்லாம் பொறுத்துக்கொண்டு அதேசமயம் அவர்களுடைய தவறை அவர்களுக்கு புரியவைத்து வழிநடத்தும் பொறுப்பான அப்பான்னு கலக்கிருக்காரு. இந்த படத்துல வர எல்லாருமே அவ்ளோ அழகா நடிப்புன்னே சொல்லமுடியாதபடி நடிச்சுருக்காங்க. குறிப்பா பெரிய பொண்ணா வர்ற Shailene Woodley  அப்புறம் 10 வயசுல வயதொறந்தாலே பன்னீரும் தேனுமா பேசுற Spoilt Child Amara Miller க்லூனிக்கு சமமா செமையா நடிசிருக்குகாங்க  இந்த ரெண்டு பொண்ணுங்களும்..
Shailene Woodley
Amara Miller
 இந்த படம் இதே பேருல வந்த ஒரு நாவல மையமா வெச்சு எடுக்கப்பட்டது. எழுதி இயக்கினவரு Alexander Payne .  இவரு ஏற்கனவே Sideways படத்துக்கு ஆஸ்கார் வாங்கினவரு. இந்த படத்துக்கு  "Best Adapted Screenplay " விருது இவருக்கும் இவரோட திரைக்கதை எழுதின Nat Faxon & Jim Rash க்கும் இந்த வருஷம் கிடைச்சுருக்கு. Best Actor க்லூனிக்கு கிடைகும்ம்னு கொஞ்சம் பேரு சொன்னாங்க ஆனா பாவம் அவருக்கு மிஸ் ஆயிடுச்சு 


கொஞ்சம் மெதுவா போற படம்தான், ட்விஸ்ட் கிஸட்டு எல்லாம் பெருசா ஒன்னும் கிடையாது ஆனா கண்டிப்பா போரடிக்காம போகும். அதனால கண்டிப்பா பாருங்க. 

-சிடிசன் 

உ.பி : இரு வாரிசுகள் நடத்தும் போர்


முன்குறிப்பு: 

இந்த பதிவு நான் போனவாரம் கொஞ்சம் எழுத ஆரம்பிச்சு draft ல இருந்தது. இப்போ பதிவ முடிச்சு போடறதுக்குள்ள முடிவே தெரிஞ்சு போச்சு :( முலாயம் சிங் தான் அடுத்த முதல்வர், மாயா அக்கா 2nd ,காவி ௩, பழைய கதர் 4 .இருந்தாலும் கஷ்ட்டப்பட்டு இவ்ளோ எழுதினத கொஞ்சம் படிச்சிருங்க ப்ளீஸ் :-)

உத்தரப்ரதேசம், இந்தியாவின் அரசியல்ரீதியாக மிக முக்கியமான மாநிலம். அதன் பரந்து விரிந்த நிலபரப்பும் அதன் மக்கட்தொகையுமே அதற்கு அந்த முக்கியத்துவத்தை கொடுத்துக்கொண்டிருகிறது. அதனால் தான் அம்மாநிலம் இதுவரை 8 பிரதம மந்திரிகளை இந்தியாவிற்கு கொடுத்துள்ளது. ஒரு காலத்தில் காங்கிரஸ் மிக செல்வாக்காக இருந்த மாநிலம். இப்படியான ஒரு மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகள் ஆளபோவது யார் என்பதே இப்போது நாட்டின் முக்காலே மூணுவீசம் ஆட்களின் கேள்வி.அதை நாம் நம் பாணியில் கொஞ்சம் அலசுவோம்.

காங்கிரஸ்:

காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசர் ராகுல் காந்தி கட்சியை இந்த தேர்தலில் கரை சேர்த்துவிடவேண்டும் என்று முழு மூச்சாக களமிறங்கியுள்ளார். அவருக்கு பக்கத்துணையாக அவரது அக்கா பிரியங்கா வதேராவும்??(அவங்க அம்மா சோனியா திருமணத்திற்கு பின் சோனியா காந்தி ஆன மாதிரி இவங்களும்  பிரியங்கா வதேரா ஆரதுதானே முறை :-)) மற்றும் அவர் குடும்பத்தில் உள்ள அனைத்து நண்டு சின்டுகளும் களமிறங்கியுள்ளனர். ஆனா கட்சி இப்போ அங்க இருக்குற நெலமைல அவங்க எல்லாம் என்னதான் தலைகீழ நின்னு தலையால தண்ணி குடிச்சாலும் ஒன்னும் தேறாது போல.

பி.ஜே.பி:

இவங்களும் கிட்டத்தட்ட காங்கிரஸ் நெலமைலதான் இருக்காங்க. என்ன இவங்களுக்கு ஒரு ஆறுதல்னா..எப்படியும் 3 இல்ல 4 இடம் தான் வருவோம்னு    அவங்களுக்கே நல்ல தெரியும் அதனால பெருசா ஒன்னும் எதிர்பாகல அவங்க. ஆனா காங்கிரச விட ஒரு செஅட் ஆவது கூட வாங்கனும்னு துடிக்கிறாங்க. அப்போத்தான் 2014 தேர்தல்ல கூட்டணி போட
கட்சிகள் வரும். பாப்போம் இவங்க கதை என்ன ஆகுதுன்னு.


பி.எஸ்.பி:


பஹுஜன் சமாஜ், இதான் இப்போ அங்க ஆளுங்கட்சி. மாயாவதி தான் முதல்வர். அசுர பலத்தோட இந்த தேர்தல சந்திகிறாங்க. அரசாங்க பலம், பண பலம் எல்லாம் இவங்க கிட்ட இருக்கு.ஆனா மக்கள் பலம்??? தலித் மக்கள் ஓட்ட வெச்சு கரை சேர்ந்துரலாம்னு பாக்குறாங்க. சாகபோற நேரத்துல சங்கர சங்கராங்கர மாதிரி, கட்ட கடைசில ஒரு 3 மந்திரிங்கள கட்சிய விட்டு நீக்கினாங்க. ஊழலுக்கு எதிரான நடவடிக்கயாமா. சிரிப்பு வரல??மாநிலத்தையே 4 பிரிக்கணும்னு அடுத்த குண்டு போட்டாங்க. ஆனா இதுக்கு அவ்வளவா ஆதரவு இல்ல.தன்னோட சிலை தன்னோட கட்சி சின்னம் (யானை) சிலை வெச்சத தவிர சொல்றமாதிரி ஒன்னும் பண்ணல. இந்த முறை மாயா அக்கா ஜெயிகலன்னா அவங்க பாடு கொஞ்சம் கஷ்டம் தான்.


எஸ்.பி


சமாஜ்வாடி பார்ட்டி, நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச முலாயம் சிங் யாதவ் தான் தலைவர், இவரோட மகன் அகிலேஷ் குமார் யாதவ் தான் அங்க அப்பாவ ஜெயிக்க வைக்க களமிறங்கி இருக்கார். அங்க நடந்த பிரசாரத்துல ராகுல் காந்திக்கும் இவருக்கம் நடந்த போட்டா போட்டி தான் செம சுவாரசியம். ராகுல் காந்திய செம ஓட்டு ஒட்டி கைதட்டல் வாங்கினார். அவருக்கு நிகரா சூறாவளி பிரசாரம் பண்ணார். அப்பவ ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்கசொல்லிட்டு கட்சிய தானே வழிநடத்தினார். அதுல ஜெயிச்சாத்தான் இவருக்கு அரசியல் எதிர்காலம். ஜெயிப்பாரா???


-சிடிசன் :-)

Monday, March 05, 2012

ரீ-என்ட்ரி!!!

நான் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா ஒண்ணுமே எழுதல.சரி ரொம்ப நாள் ஆச்சே மறுபடியும் ஆட்டத்த ஆரம்பிக்கலாம்னு தோணிச்சு. அதான் template எல்லாம் மாத்தி புதுசா வந்தாச்சு. இனிமே நாடு நடப்பு, சினிமா, அரசியல் பத்தி எல்லாம்  தொடர்ந்து எழுதலாம்னு இருக்கேன். பாப்போம் :)

Thursday, January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன்....விமர்சனம்


செல்வராகவன் இயக்கத்தில் மூன்று வருடங்களாக தயாரிப்பில் இருந்து இன்று வெளிவந்திருக்கும் படம். இந்த மூன்று வருடங்களாக நான் ரொம்ப எதிர்பாத்தேன்...பாட்டு எல்லாம் கேட்ட பின்னாடியும் செம எதிர்பார்ப்பு இருந்தது....இன்னிக்கு காலேல பெங்களூர் இன்னோவேடிவ்ல பாத்தாச்சு....

எப்போ தமிழ்ல வரும் இது மாதிரி படம்னு கேபிள் சங்கர் கேட்ட கேள்விக்கு பதில்தான் இந்த படம். இந்த மாதிரி ஒரு "Fantacy Adventure" படத்த 35 கோடி பட்ஜெட்ல எடுக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்...ஆனா செல்வா இங்க இருக்குற வசதிகளை வெச்சு ஒரு அட்டகாசமான படம் கொடுத்திருக்கார்....இப்படி ஒரு கதையை யோசிச்சதுக்கே அவருக்கு ஒரு அவார்ட் குடுக்கணும்...

இந்த படத்துல மொத்தம் மூணு விஷயம் இருக்கு...

1. செல்வாவோட திரைக்கதை: ஆரம்பத்தில் எங்கயோ ஆரம்பிக்கிற படம் interval போது வேற ஏதோ ஒரு உலகத்துக்கு போகுது...சத்தியமா செல்வாவோட உழைப்பும, அவர் பண்ண ஹோம் வொர்க்கும் படம் முழுக்க தெரியுது...

2. ஒளிப்பதிவு,படத்தொகுப்பு அப்புறம் கலை...இந்த மூணு பார்ட்டும் ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க...

3: ரீமா, பார்த்திபன் அண்ட் கார்த்தி....நடிப்புல ரீமா சும்மா பட்டாசு கிளப்பிருக்காங்க...முதல் பாதில அவங்க துப்பாக்கி சுடும் ஸ்டைலும் அந்த அலட்சியமான லுக்கும்..வாவ் அட்டகாசம்..அப்புறம் பார்த்திபன் இவர் இரண்டாம் பாதிலதான் வரார்...லேட்ட வந்தாலும் அதகளம் பண்றார்..கார்த்தி முதல் பாதில கலக்கிருந்தாலும், இரண்டாம் பாதில அவங்க ரெண்டு பேர் முன்னாடி எடுபடல...
ஆண்ட்ரியா அவங்க தான் பாவம்...ரொம்ப ஒன்னும் வேலை இல்ல...:( அவங்க பாடின "ஒரு மாலை நேரம்" பாட்டும் படதுதுல காணோம்... :((.

அப்புறம் இந்த படத்துல துநிசு செல்வா சில விஷயங்கள் பண்ணிருக்காரு...அது எல்லாம் வெட்டுலேந்து எப்படி தப்பிசுசுன்னு தெரியல...ஆனா அந்த காட்சிகள் எல்லாம் கண்டிப்பா தேவை...

மொத்ததுல "ஆயிரத்தில் ஒருவன்"...தமிழ் திரையுலகை பெருமைப்படுத்துபவன் :)
எல்லாரும் தியேட்டர்ல போய் இந்த படத்த பாருங்க...மிஸ் பண்ண கூடாத ஒரு படம் இது.

Thursday, December 31, 2009

பத்து வருடங்கள் (2000-2009)


இந்த பத்து வருடங்கள் என் வாழ்க்கைல ரொம்ப ரொம்ப முக்கியமானது...அதைப்பற்றி இப்போ கொஞ்சம் பார்க்கலாம்

2000: இது ரொம்ப முக்கியமான வருஷம்..ஏன்னா இந்த வருஷத்துல தான் நான் +2 முடிச்சேன்...ஓகோன்னு இல்லாட்டியும் ஓரளவு நல்ல மார்க் தான் வாங்கினேன்...என்ன அந்த entrance exam தான் கொஞ்சம் கவுத்திருச்சு(கொஞ்சமாடா கவுத்திச்சு)...அப்புறம் ஏகப்பட்ட கனவுகளோட காலேஜ் வாழ்க்கை ஆரம்பம்.

2001: காலேஜ்ல என்னோட first crush (ச்சூ..அதான் first ஆன்னு எல்லாம் கேக்கப்படாது)..ஆரம்பம் நல்லா இருந்து பினிஷிங் சரி இல்லாம போச்சு....காலேஜ் பக்கத்துல ரூம் எடுத்து தங்கினது நிறைய friends அறிமுகமானது ன்னு இந்த வருஷம் செம சூப்பர்...

2002: காலேஜ்ல இப்போ நாங்க சீனியர்...ஆனா ராக்கிங் பண்ணமுடியாம நொந்து பொய் இருந்தோம்...இந்த வருஷம் தான் EEE Group செட் ஆச்சு....
மறக்கவே முடியாத gang அது....

2003: செம ஆட்டம் இந்த வருஷம் தான் எங்க ரூம்லயும் சரி காலேஜ்லயும் சரி...கெட்ட ஆட்டம் போட்டோம் ..போதாகுறைக்கு இந்த வருஷம் cricket world cup வேற....எங்க ரூம்ல tv இருந்ததால பாதி காலேஜே ரூம்லதான் இருக்கும்..அதுவும் நம்ம ஆட்கள் பட்டய களப்பினாங்க....படிப்பு? அது பாட்டுக்கு ஒரு ஓரமா போச்சு....

2004: இந்த வருஷம் ஆரம்பிச்ச உடனேயே பயமும் ஆரம்பிச்சுருச்சு....படிப்பு இன்னும் 3 மாசத்துல முடிஞ்சுரும் அப்புறம் என்ன பண்ண போறோம்னு ஒரு பயம்....கையில ஒரு வேலையும் இல்லாம படிப்ப முடிச்சுட்டு வீட்டுக்கு போட்டி கட்டியாச்சு....நல்லா ஒரு 6 மாசம் ரெஸ்ட்...அப்புறம் இந்த வருஷத்துல சுனாமி வேற :((..நான் அப்பா அந்த சமயத்துல சென்னைல இருந்தேன்..ரொம்ப கஷ்டமா இருந்தது...

2005: முதல் ஒரு மாசம் வீட்டுல தான்...அப்புறம் பெங்களூர் பயணம்..என்னோட cousin வீட்டுக்கு...ஜாவா கிளாஸ் சேர்ந்து ஒரு 6 மாசம் நல்லா வீட்டு சாப்பாடு தூக்கம் ன்னு ஒரு ராஜ வாழ்கை...தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு பாரபட்சம் பாக்காம resume அனுப்பி வெச்சதுல திடீர்னு CSS la வேலை கெடச்சுது...படிச்சது??((சரி சரி) எலெக்ட்ரிகல் ஆனா பார்த்த வேலை online Advertising...

2006: இந்த வருஷம் முழுக்க செம ஜாலி...புது ஆபீஸ் செட் ஆகி நிறையா friends அப்புறம் மறுபடியும் ரூம் வாழ்க்கைன்னு செம ஜாலியான வாழ்க்கை...என்னோட future online advertising லதான்னு முடிவு பண்ணின வருஷம்...அதபத்தி நிறைய கத்துக்கனும்னு முடிவு பண்ணின வருஷம்...

2007: இந்த வருஷமும் வழக்கம் போல ஜாலியாதான் போச்சு...திரும்ப லைப் பத்தி கொஞ்சம் பயம் வந்தது...நம்ம சம்பளம் எதுவும் மிச்சமாக மாட்டேங்குதேன்னு......மித்தபடி ஒன்னும் குறைவில்லாம போச்சு....

2008: இந்த வருஷ ஆரம்பத்துல என்னோட நெருங்கிய நண்பர்கள் வேற நல்ல வேலை கிடைச்சு போனாங்க...கொஞ்ச நாள் ரொம்ப கஷ்டமா இருந்தது...நானும் வெளியில ட்ரை பண்ணினேன்...அப்படி திடீர்ன்னு என்னோட நண்பர்கள் மூலமா Yahoo Mumbai ல வேலை கிடைச்சுச்சு.செம சந்தோஷமா இருந்தது...மும்பை வாழ்க்கை Yahoo ல வேலை ன்னு ஒரு கெத்தா இருந்தது...வருஷ கடைசில மும்பைல 26/11....ரொம்பவே பயந்து போயிட்டேன் அப்போ...

2009: இந்த வருஷம் ஆரம்பம் மும்பைல இருந்தேன் ...மறக்கவே முடியாத மும்பை வாழ்க்கை..ராஜ வாழ்க்கை .....என் அத்தை வீட்டுல தான் தங்கி இருந்தேன்....மும்பை போனா எல்லாரும் மிஸ் பண்றது நம்ம சாப்பாடு..அது எனக்கு நல்லா கெடச்சுது....:))) செம friends....மும்பையும் அதன் சுத்து வட்டாரத்துல இருக்குற எல்லா இடமும் அத்துப்படி...ஆனா வேலை கொஞ்சம் கடுபடிசுது இந்த வருஷத்துல...அப்புறம் ஊருக்கு வந்துட்டு போறதும் பெரிய சிக்கலா இருந்தது...சரின்னு திரும்ப வேலை தேடும் படலம் ஆரம்பிச்சது...கடைசியா மறுபடியும் வந்தது பெங்களூர்....இப்போ AOL....முன்னைவிட செம சந்தோஷம்...முக்கால்வாசி பேர் என்கூட சென்னைல வேலை பார்த்தவங்கதான்...இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு....

இப்படி இந்த 10 வருஷம் நானே நினைக்காத பல விஷயங்களை தந்துருக்கு.....அடுத்த 10 வருஷம் இத விட முக்கியமா இருக்கும்...வாழ்கைல செட்டில் ஆகறது. ...தங்கை கல்யாணம்...என் கல்யாணம் ன்னு நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கு...ஆண்டவன் அருளால எல்லாம் நல்லபடியா நடக்கணும்...அதுக்கு வேண்டிக்கொண்டு...அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லி விடைபெறுகிறேன்...நன்றி!!! வணக்கம். :)

Wednesday, September 23, 2009

கமலுக்கும் போக்கிரி வடிவேலுக்கும் உள்ள ஒற்றுமை









பதிவர் 1:போக்கிரி வடிவேலுக்கும் கமலுக்கும் உள்ள ஒற்றுமை???






பதிவர் 2: தெரியலே???

பதிவர் 2:ரெண்டு பேராலயும் அவங்க கொண்டைய மறைக்கவே முடியல எவ்வளவு வேஷம் போட்டாலும் :))))))))

பதிவர் 2: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...எப்படில்லாம் யோசிக்கிறாங்க

Friday, August 21, 2009

விநாயகர் சதுர்த்தி---ஸ்பெஷல் ஜோக்

ஒரு பெரிய கப்பல்ல நெறைய பேரு ஒரு பயணம் போனாங்க...அப்ப நடுக்கடல்ல அந்த கப்பல் கோளாறு ஆகிருச்சு....எல்லாரும் தப்பிக்க என்னனமோ பண்றாங்க ஆனா முடியல...கப்பலும் கொஞ்சம் கொஞ்சமா மூழ்கிட்டு வருது...ஒடனே அல்லாரும் நம்ம பிள்ளையார வேண்டுறாங்க...
விநாயகா...வினை தீர்ப்பவனே நு பயங்கரமா அழுதுகிட்டே பாடுறாங்க...இவங்க வேண்டினதாலயோ இல்ல இவங்க பாட்ட கேட்டு மெர்சலாயோ நம்ம பிள்ளையார் வராரு....
ஒடனே எல்லாரும் அப்பா விநாயகா எங்கள காப்பாத்துப்பா ன்னு கதற்ராங்க ..ஒடனே கொஞ்சம் யோசிச்ச பிள்ளையார் என்ன பண்ணாருன்னா.............
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!



இப்படி கெட்டபெல்லாம் மாத்தி செம ஆட்டம் போட்டாரு பிள்ளையார் கரைலேந்து....

இத பாத்து கொஞ்சம் கடுப்பும் கொஞ்சம் பயமுமா எல்லாரும் பிள்ளையார் கிட்ட ...என்ன பிள்ளையாரே எங்கள காப்பாத்தாம இப்படி டான்ஸ் ஆடுறியே இது நியாயமான்னு கேட்டாங்க.

அதுக்கு பிள்ளையார்

"ஏன்டா வெண்ணைங்களா நான் ஒரு நாள் இப்படி அடுறதுக்கே இப்படி பீல் பண்றீங்களே என்னைய வருஷா வருஷம் கடல்ல தூக்கிபோட்டு என்னமா ஆடுனீங்க அப்பா எனக்கு எப்படி இருக்கும்"....இந்தா இன்னும் கொஞ்சம் பாருன்னு போட்டாராம் செம டான்ஸ்...
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.....:))))))))))))

Saturday, March 07, 2009

துக்ளக் கேள்வி பதில்????

இந்த வார துக்ளக்கில் ஒரு கேள்வி பார்த்தேன்....கேள்வி இதுதான்...
"இலங்கை விவகாரத்தில் ஏன் இலங்கையிலுள்ள எந்த தமிழரும் தீக்க்குளிக்கவில்லை???"

எனக்கும் இதற்க்கு பதில் தெரியவில்லை...யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்!!!!!!!!!!!!!......இப்படி ஒரு பதிவை போட்டதால் என்னை திட்டினாலும் நான் கவலைப்படமாட்டேன்!!!!!!!

Tuesday, March 03, 2009

வந்தாச்சு!!! வந்தாச்சு!!! தேர்தல் வந்தாச்சு......

  நம்ம தலைவர்????? மன்மோகன் சிங் இப்போதான் பிரதமரான மாதிரி இருக்கு அதுக்குள்ள 5 வருஷம் ஓடிபோயிருச்சு!!!!!!!!!!!!!!!

(மன்மோகன் சிங் : ஏன்டா கொய்யால நானே எப்படா இந்த நாற்காலிய விட்டுட்டு நிம்மதியா இருக்கலாம்னு இருக்கேன்...உனக்கு பீலிங்க்ஸா...உனக்கு 5 வருஷம் ஓடிருச்சு ஆனா எனக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ் )


எலெக்ஷன் வந்தாலே எனக்கு ரொம்ப குஷி ஆகிடும்....எப்பவுமே. இருக்குற அத்தனை பேப்பர், ரிப்போர்டர்,ஜூ.வீ ,நக்கீரன்,துக்ளக் னு ஒன்னு விடாம படிப்பேன்....அதுவும் போன எலெக்ஷன் நான் காலேஜ் போயிட்டு வந்துட்டு இருந்தேன்...அதனால டிஸ்கஷன் பயங்கரமா இருக்கும்...கீரநூர்ல உள்ள லோக்கல் ஆளுங்கல்ட கருத்து கணிப்பெல்லாம் நடத்துவோம்....:)))))

இப்போ இந்த எலக்ஷனுக்கு நான் மும்பை வந்தாச்சு....இந்த ஊர்ல பயங்கரவாதிங்கலால தான் பிரச்சினையே தவிர அரசியல் வாதிங்க நம்ம ஊர் மாதிரி சண்ட போட்டுக்க மாட்டேங்குறாங்க....அதனால ஒரு பரபரப்பே இல்லாம ரொம்ப சப்புனு இருக்கு எப்பவுமே ... :)) பாப்போம் எலெக்ஷன் நேரத்துலயாவது கொஞ்சம் காரசாரமா இருக்கான்னு?

I miss you Tamilnadu :((((((

அப்படியே கீழ இருக்குற படத்தையும் பாருங்க....கூகிள் லேந்து எடுத்தது!!!!!!!!





















Tuesday, February 10, 2009

தமிழ் சினிமாவில் வேற்றுமொழி நாயகர்கள்!!!!!!


இன்று கே டிவியில் மௌனம் சம்மதம் படம் பார்த்தேன்..அதற்க்கு முன்னமே முரளிகன்ணனின் எதிர்நாயகர்கள் பதிவை வாசித்த காரணமோ என்னமோ அவர் இதுவரை தொடாத இந்த விஷயத்தை பற்றி எழுதலாம் என்று தோணி ஆரம்பிக்கிறேன் :)))))))நான் ரொம்ப சின்னப்பய்யன் அதனால எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்லேந்து வந்தவேற்றுமொழி நாயகர்கள் பற்றி பார்க்கலாம்......இதுக்கும் மின்னாடி முரளிகண்ணன் அவர்கள் தாராளமாக தொடரலாம் ......:அவர்தான் குரு...நான் ஏகலைவன் மாதிரி ஒரு சிஷ்யன் அவ்வளவுதான்.....சரி மேட்டருக்கு போவோம்...

மம்முட்டி:

இவர் படம் நான் பார்த்து ஒரு மலையாள படம்...பெயர் நினைவில் இல்ல..ஆனா இந்த படத்தில் இவர் மோகன்லாலுடன் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்...ஒரு ஓடும் ரயிலில்தான் படம் முழுவதும் நடக்கும்....இந்த பதிவை யாரவது படித்தீர்களானால் இந்த படத்தை சொல்லலாம் :)))))))))அடுத்து ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாஹ்....இந்த படத்தில் இவர் மிக சிறப்பாக நடித்திருப்பார்.....(பட வரிசை ஒழுங்காக இருக்காது....எனக்கு ஞாபகத்தில் இருந்த படங்களை பற்றித்தான் சொல்லிஇருக்கிறேன்).

தளபதி:

இந்த படம் வந்த போது எனக்கு ஒரு 5 அல்லது 6 வயசு இருக்கும்...ஆனால் இந்த படத்தில் மம்முட்டியின் நடிப்பை இப்பொழுது பார்த்தாலும் எனக்கு புல்லரிக்கும்...,,அவ்வளவு இதமாக அருமையாக நடிதிருப்ப்பார்...அவருடைய உடல்மொழி மற்றும் ரஜினியுடனான அவர் காட்சிகள் எல்லாவற்றிலும் அவர் ஒரு மகத்தான நடிகன் என்று காட்டிருப்பார். ஏன் தேவா???? நீ என் நண்பன்டா....டயலாக் எல்லாம் இப்போ கேட்டாலும் கண்ணீர்வரும்.....அப்புறம் ஷோபனாவ தலைவருக்கு பொண்ணுபார்க்க போற சீன்..அதுல சாருஹாசன் கழுத்தை பிடித்து பேசும் காட்சி...மனுஷன் பின்னிருப்பான் .

மௌனம் சம்மதம்:


ஒரு வக்கீலாக இடைவேளைக்கு பிறகே வந்து ஒரு படத்தை தூக்கி நிறுத்தறது இவரால தான் முடியும்.....இவரோட மலையாள accent ல நீதிமன்றத்துல வாதாடுற காட்சி சூப்பரா இருக்கும்...போதாகொறைக்கு அமலா வேற கதாநாயகி...இந்த படம் இயக்கியது யாருன்னு எனக்கு தெரியல :(((...தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும்...கொஞ்சம் பார்க்கலாம்கிற நல்ல படங்கள்ல இதுவும் ஒன்னு....


அழகன்:

அடா அடா அடா....மமுட்டியபத்தி பேசிட்டு இந்த படத்த சொல்லாட்டி என்ன ஆகுறது....ஒரு ஹோட்டேலியர் தன் குழந்தைகளோட தனியா வாழுராறு அவர் வாழ்கையில வர மூணு பொண்ணுங்களோட என்ன மாதிரியான உறவு...நட்பா???காதலா என்று சொல்லும் படம்...இந்த படத்துல வர சங்கீத ஸ்வரங்கள் பாட்டு ஆகா..இப்பவும் கேட்டவுடன் சொக்கி போற பாட்டு...!!!!இசை அம்சலேகா!!!!!!! (நான் இசைஞானி என்று எழுதிருந்தேன்....சுட்டிக்காட்டிய அனானி நண்பருக்கு நன்றி)


எதிரும் புதிரும்!!

இதில் ஒரு போலீசாக வீரப்பனை பிடிக்கிற வேடத்தில் நடித்திருப்பார்.....இதிலும் கலக்கிருப்பார்...


மறுமலர்ச்சி:

இந்த படத்தில் ராசு படையாசியாகவே வாழ்ந்திருப்பார் ....இதில் தேவயானி மம்முட்டியின் மனைவியாக நடித்திருப்பார்...இன்னும் குறிப்பிட்டு சொல்ல ரஞ்சித்.மன்சூரலிகான் ஆகியோரும் கலக்கிருப்பார்கள்....

ஆனந்தம்:

இந்த படத்தில் இவர் பின்னி பெடலடுத்துருப்பார்....இதிலும் இவருக்கு தேவயானி ஜோடி....இவர் கல்யாணம் பண்ணி புது மனைவியிடம் வழிகிற வழிசலாகட்டும்....தம்பியிடம் ஆற்றாமையில் பொங்குவதாகட்டும் தான் ஒரு நடிப்பின் சிகரம் என்பதை சொல்லாமல் சொல்லி விடுவார்.....

அவ்வளவுதான் இனி ஓவர் டு முரளிகண்ணன் :))))))))அவருக்கு ஒரு டாபிக்கை எடுத்து குடுத்த சந்தோஷத்துடன் இந்த பதிவை முடித்துக் "கொல்கிறேன்"...நன்றி வணக்கம்

Tuesday, December 09, 2008

திருக்குறளும் கலைஞர் மற்றும் மு.வ உரையும்

இன்னிக்கு நான் கவிதாலயா பேனர் வழங்கும் திருவண்ணாமலை ட்ரைலர் பார்த்தேன்...அதுல ஆரம்பத்துல வர "அகர முதல எழுத்தெல்லாம்" பாத்து கேட்டதும் எனக்கு பழைய ஞாபகம் வந்து எல்லா கடவுள் வாழ்த்து குரளையும் ஞாபகப்படுத்த முயன்றேன்...ஒரு ஆறு குறள் வரிசையாக ஞாபகம் வந்தது...சரியென்று நம்ம கூகிளாண்டவர்கிட்ட கேட்டேன்...ஏகப்பட்ட வலை குரளுக்கென்று இயங்கி வருகிறது...அதில் முக்கியமானது தலைவர் கலைஞர் உரை...
நான் பள்ளியில் படிக்கும் பொது திருக்குறள் படிக்க மு.வரதனாசனார் உரை தான் வாங்கி படிப்போம்...அதுதான் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்...நான் கலைஞர் உரை இதுவரை படித்ததில்லை...சரி என்று இதை படித்தால்..எனக்கு என்னவோ மூ.வ உரைதான் மூ.க உரையைவிட எளிதாக இருக்கிறது என்பது என எண்ணம்....நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அதை பின்னோட்டத்தில் சொல்லுங்களேன் :)))
பி.கு. இது சும்மா யாருக்கு என்ன உரை பிடிக்கும் என்பதை தெரிந்துகொள்ள மட்டும்தான்.வேறு எந்த உள்நோக்கமும் இதற்கு இல்லை...அதனால் என கொண்டையை யாரும் தேடவேண்டாம்..அது இருக்குக்கவேண்டிய இடத்தில் பத்திரமாக உள்ளது...

Thursday, November 27, 2008

திகிலில் மும்பை!!!




நேற்று இரவு ஒன்பதரை மணிக்கு தொடங்கிய தீவிரவாதிகளின் தாக்குதல் இந்த பதிவை எழுதும் காலை 10:20 வரை ஒரு முடிவிற்கு வரவில்லை.இதுவரை 101 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதில் 12 பேர் போலிஸ்.அவர்களுக்கு வீர வணக்கம்.

இன்று வீட்டைவிட்டு யாரும் வெளியில் வர வேண்டாம் என்று போலிஸ் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது...மும்பை ஒரு வித அமானுஷ்யமான அமைதியில் உள்ளது... இது வரை ஒரு 60 போன் கால்லாவது வந்து இருக்கும் நேற்று இரவிலிருந்து... அனைவருக்கும் நன்றி!!!  

அரசாங்கம் வழக்கம் போல் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது..இனி ஒரு ரெண்டு வாரம் கழித்து பிரதமர் தன் தலைவி சோனியாவுடன் குண்டு வெடித்த இடங்களை பார்வை இடுவார்...இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதிஉதவி செய்வார்கள்.... போங்கடா.............

இதுக்கு மேலும் இந்த அரசாங்கம் விழித்துக்கொள்ளவில்லை என்றால்...... நம்ம என்ன செய்வது உயிரை கையில் பிடித்து நாட்களை கடத்த வேண்டியதான்.

.. அடுத்த குண்டுவெடிப்பில் தப்பித்தால் பதிவு எழுதுவோம் இல்லை என்றால் நம்மை பற்றி பிறர் பதிவெழுதுவார்கள்... Whatever Happens...Life has to go on...lets go with life

Wednesday, October 08, 2008

Online Advertising ஒரு எளிய அறிமுகம் 3

முதல் இரண்டு பதிவை படிக்காதவர்கள் அப்படியே கொஞ்சம் கீழே போய் அதை படித்துவிட்டு வந்துவிடுங்கள் ப்ளீஸ்...


சரி மேட்டருக்கு வருவோம்!!!
இப்படி CPA,CPC,CPM and CPD படி அக்ரிமன்ட் போடும் ஒரு ஏஜென்சி அதைக்கொண்டு தான் லாபம் பார்க்க முடியும்...அதனால் தான் நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் முக்கியம். இங்கு நாம் code அடித்து அதை டெஸ்ட் பண்ணி அப்பறம் கிளைன்ட் பார்வைக்கு அனுப்ப நேரம் கிடையாது...நமக்கு வரும் வேலை எல்லாம் அவசர வேலையாகவே வரும்..அதிகபட்ச நேரமே 15 நிமிஷம் தான்...ஆனாலும் இந்த டென்ஷனில் வேலை செய்வது ஜாலி ஆகத்தான் இருக்கும் :)))

சரி நீங்கள் ஒரு வெப்சைட் ஆரம்பித்து உள்ளீர்கள்... உங்கள் தளத்திற்கு ஹிட்ஸ் நல்லா இருக்கு நீங்கள் அதில் விளம்பரங்கள் போடலாம் என்று நினைகிறீர்கள் இப்போது என்ன செய்வீர்கள்???

Yahoo, MSN,Google போன்ற முதலைகள் எல்லாம் சொந்தமாகவே ஒரு Ad Server வைத்து உள்ளார்கள். சொந்த server இல்லாதவர்களுக்காகவே Doubleclick, Real Media போன்ற கம்பெனிகள் DART (Dinamic Advertising and Reporting Tool), OAS(Open Ad Stream),Zedo,Atlas என்று பல உள்ளது.
நாம் செய்ய வேண்டியது இது எல்லாவற்றையும் பார்த்து நமக்கு எது பிடித்துருகிறதோ அதை தேர்ந்தெடுக்க வேண்டியதுதான்.

இப்படி சொந்த server இல்லாமல் வேற ஒரு server உபயோகபடுத்துவதை 3rd party Server என்போம். அந்தந்த சர்வர் மூலமாக வரும் code ஐ 3rd party Code என்போம்.

இந்த மூன்று பதிவுகளும் இந்த துறையைபற்றிய ஒரு சின்ன அறிமுகம் தான்.
நாம் மூன்று வருடங்களாக வேலை செய்யும் ஒரு துறையை பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரியவில்லையே என்ற ஆதங்கத்தில் நான் எழுதியது.

என் முயற்சி உங்களுக்கு கொஞ்சமாவது பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சி...ஏதாவது குறைகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள், திருத்திக்கொள்கிறேன்...

Online Advertising க்கு என்றே ஒரு  ஆங்கில blog ஆரம்பித்துள்ளேன் படித்து பார்த்து சொல்லுங்கள் :)))

Thursday, September 25, 2008

Online Advertising ஒரு எளிய அறிமுகம் 2


ஒரு வழியாக இப்போதுதான் நேரம் கிடைத்தது...மிக தாமதமாக வந்தமைக்கு மன்னியுங்கள்.... இனி Online Advertising கில் என்னென்ன முறைகள் பின்பற்றபடுகிறது, நிறுவனகள் வருவாயை எப்படி கனகிடுகின்றன என்பது பற்றி பார்ப்போம்.... அதற்கு முன்னால் கீழே இருக்கும் படத்தை கொஞ்சம் பாருங்கள்... இதில் Advertiser என்பது ஒரு நிறுவனம் அது அதன் புதிய பொருளை ஒரு publisher இனியதளத்தில் (Yahoo,MSN,)விளம்பரப்படுத்த விரும்புகிறது என வைத்துக்கொள்வோம்...

சில நிறுவனங்கள் தானே ஆட்கள் வைத்து creative design செய்யும்.
சில அதற்கென்றே இருக்கும் Agency களிடம் தந்துவிடும். இப்படி அந்த Creative எனப்படுவது ஒரு .gif, .swf, video என பல வகைகளிலும் இருக்கும். publisher நிறுவனத்திற்கு அந்த creative வந்ததும் அவர்கள் தங்கள் வாசம் உள்ள publishing tool மூலம் அந்த creative வை தங்கள் இணையத்தில் சேர்ப்பார்கள். 
கொஞ்சம் மண்டை காய்ந்துவிட்டதா?

சரி Creative போட்டாச்சு இதுக்கு எப்படி கணக்கு வைத்திருப்பார்கள்?

எல்லா வேலையையும் தொடங்குவதற்கு முன்னால் Publisher Advertiser ரிடம் Contract போட்டுருப்பார்கள்...இப்போது புழக்கத்தில் உள்ள நாலு முறைகளில் ஒன்று, எத்தனை நாள் ஓடவேண்டும், எந்த பக்கத்தில் ஓடவேண்டும் எவ்வளவு ரூபாய்க்கு வேண்டும் என்பது எல்லாம் அந்த Agreement இல் இருக்கும்.  

சரி அது என்ன நாலு முறைகள்??  

1.CPA
2.CPM
3.CPC 
4.CPD

1. CPM ( Cost Per Mille) : அதாவது ஒரு 1000 முறை அந்த Ad தெரிவதற்கு இவ்வளவு ரூபாய் என்று agreement இருக்கும். ( In Latin Mille means Thousand).  
2. CPA (Cost Per Action) இது நீங்கள் பார்க்கும் Ad மூலமாக ஒரு செயல் நிகழும்போது இவ்வளவு ரூபாய் என போடும் ஒப்பந்தம். இது நீங்கள் இன்சூரன்ஸ் , பாங்கிங் போன்ற விளம்பரங்களில் உள்ள Form ஐ பூர்த்தி செய்தால் மட்டுமே காசு.  

3. CPC (Cost Per Click) இது நீங்கள் பார்பதோடு மட்டுமல்லாமல் அதை கிளிக் செய்தால் மட்டுமே. கூகிள் ஆட சென்ஸ் போல.

4. CPD (Cost Per Day) இது என்னத வகையிலும் இருக்கலாம் ஆனால் ஒரு நாள் முழுக்க வருமாறு போடப்படும் ஒப்பந்தம். அந்த 24 மணி நேரமும் இந்த ad தான் வரும். சரி 

இப்போது இது போதும்...மீதி அடுத்த பதிவில்... சந்தேகங்கள் இருப்பின் பின்னோட்டத்தில் கேளுங்கள்....

Tuesday, September 09, 2008

ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்!!!!!பருத்திவீரன் பாடல் பாணியில் ஒரு குத்து பாட்டு!!!!!

நன்றி : இந்த பாடலை எழுதியவர் க்கு....

என் இனிய தமிழ் மக்களே....
உங்களுக்கு
 ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில் வர்ணித்துள்ளான்இந்த வாரதிராஜா...

நீங்கள்
 கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம்,


இந்த
 படைபிற்க்காக
சுட்டது
: பருத்தி வீரன் பாடலை
சுடாதது
: அந்த பாடல் வரிகளை

Start Mizik...

Team members:

ஊரோரம்
 IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
ஊரோரம்
 IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
நான்பிறந்த
 சென்னையில ஆளுக்காளு programmera
நான்பிறந்த
 சென்னையில ஆளுக்காளு programmera

Team members:

கூடுனுமே
 கூடுனுமே codeஅடிக்க மாடு போல
கூடுனுமே
 கூடுனுமே codeஅடிக்க மாடு போல
மாட்டுனமே
 மாட்டுனமே நார-PM கையிமேல
மாட்டுனமே
 மாட்டுனமே நார-PM கையிமேல

PM:

நிறுத்துங்கடி
,  நிறுத்துங்கடி, நிறுத்துங்கிறேன்ல Codeஅடிங்கடின்னா என்னா நக்கலா
ஏய்
 Fresher நீ இங்க வா, டேய் associate நீ இங்க வா, எல்லாம் வரிசையா நில்லு
நல்லா
 keybordaa வளச்சு நெளிச்சு அடிக்கனும் என்ன


Team meber:

யோவ்
 இங்க பாருய்யா keybordala கண்டவாக்குல கைவச்சின்னா உனக்கு delivery கிடையாதுஆமா

PM:

இங்க
 பார்யா கோவத்த, டேய் TL அட்ரா

TL:

நாடரிஜ்ச
 fresherகளா நீங்க எங்க சோடி,
உங்கள
 வச்சுக்கவா projectula சொல்லிப்புடுங்கடி
C plus plus code
 அடிக்கும் சின்ன பைங்கிளி
C plus plus code
 அடிக்கும் சின்ன பைங்கிளி
ஓன்ன
 quarterக்கு associataaa தூக்கிவிடட்டுமா
ஓன்ன
 quarterக்கு associataaa தூக்கிவிடட்டுமா


PM:
Codenna
 இப்படிதான் குத்தனும், என்ன புரிஞ்சுதா

Programmer:
Design correct
ல்லாத ப்ரொஜெக்ட்குள்ள,
இப்போரவுசு
 பன்னும் PM தம்பி
நைட்டெல்லாம்
 codeaa குத்தி,
எனக்கு
 கைய்யி ரெண்டும் வலிக்கிதுடா,
கைய்யி
 ரெண்டும் வலிக்கிதுடா


PM:

அட
, ராவெல்லாம் codeaa குத்தி,
உனக்கு
 கைய்யி ரெண்டும் நொந்தாலென்ன
இந்த
 experienceஉல்ல PMகிட்ட நீயும் பாசாங்கு பண்ணாதடி

Programmer:
experience
உள்ள PMகிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல
பாசங்கு
 பண்ணுரெண்டு நீயும் அறிவுகெட்டு பேசாதடா,
நீயும்
 அறிவுகெட்டு பேசாதடா


Tester:

அடி
 bodyமேல bodyவச்சி bodyக்குள்ள HTLML codeவச்சி

TL:

அட
, அப்படி போடு SAppu (Senior Associate )


Tester:

ஓட்டி
 ஓட்டி பாத்தாலும் என் Browser Trouser கிளியுதடா

அஹா
 அஹா அஹா....
ஓட்ட
 Browserஇந்த Browser Testeruக்கு கிளியப்போகுது Trouser
ஓட்ட
 Browserஇந்த Browser Testeruக்கு கிளியப்போகுது Trouser


Test Lead:

அட
 இந்த பாட்டு படிக்காதடா எனக்கு துக்கம் ஆகுதடா
ஆமா
 ஆமா ஆமோய்....

பொசகெட்ட
 பயேல ஒனக்கு test director கேக்குதடா

Test Manager:
QC
ஈல (QC = Quality Centre)...
ஆமோய்
 ஆமோய் ஆமோய்...
QC
ஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி..
QC
ஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி
நான்
 test planaai போட்டு வச்சென் MPPயில (MPP = Microsoft Project plan)
நான்
 test planaai போட்டு வச்சென் MPPயில

ஆனா
 milestoneuகிட்ட mileuuதூரம் போகமுடியல
ஆனா
 milestoneuகிட்ட mileuuதூரம் போகமுடியல

Designer:
Risk
குள்ள riskaபோட்டு escalateuu ஆக்கிப்புட்டு
Risk
குள்ள riskaபோட்டு escalateuu ஆக்கிப்புட்டு
சப்பையான
 design changeuக்கு changeaa விடாம
சப்பையான
 design changeuக்கு changeaa விடாம
ஓங்கள
 அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
ஓங்கள
 அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க

TL:

அடி
 யாயி... ஆஹா ஆஹா ஆஹா

ELT: (Entry Level Trainee)

அள்ளி
 MPPயில estimateaa தூக்கி பொட்டு
அள்ளி
 MPPயில estimateaa தூக்கி பொட்டு
புள்ளி
 மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
புள்ளி
 மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
இப்பொ
 புலம்பினாக்க உங்கல நாங்க நம்பமுடியல

PM:

போடா
 போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலேபோடா
போடா
 பொடிப்பயலே design தெரியா மடப்பயலே
ELT batch
 சின்ன பய என்னென்னமோ பேசுரானே
designerkku
 எனக்கும் சண்டை, இப்போ உடைய போகுது மண்டை
அட
 designerkku எனக்கும் சண்டை, இப்போ உடையப்போகுது மண்டை

PM & TL:
 என்ன fresherங்கலா keyboarda கையில வச்சிகிட்டு தலைய சொரிஞ்சிக்கிட்டுநிக்கறீங்க, codeaa நீங்க அடிக்கறீங்கலா இல்ல நாங்க அடிக்கவா.

இதை எனக்கு மெயிலில் அனுப்பியது நண்பர் வெங்கடேஷ். அவருக்கு என் நன்றிகள்