Tuesday, December 09, 2008

திருக்குறளும் கலைஞர் மற்றும் மு.வ உரையும்

இன்னிக்கு நான் கவிதாலயா பேனர் வழங்கும் திருவண்ணாமலை ட்ரைலர் பார்த்தேன்...அதுல ஆரம்பத்துல வர "அகர முதல எழுத்தெல்லாம்" பாத்து கேட்டதும் எனக்கு பழைய ஞாபகம் வந்து எல்லா கடவுள் வாழ்த்து குரளையும் ஞாபகப்படுத்த முயன்றேன்...ஒரு ஆறு குறள் வரிசையாக ஞாபகம் வந்தது...சரியென்று நம்ம கூகிளாண்டவர்கிட்ட கேட்டேன்...ஏகப்பட்ட வலை குரளுக்கென்று இயங்கி வருகிறது...அதில் முக்கியமானது தலைவர் கலைஞர் உரை...
நான் பள்ளியில் படிக்கும் பொது திருக்குறள் படிக்க மு.வரதனாசனார் உரை தான் வாங்கி படிப்போம்...அதுதான் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்...நான் கலைஞர் உரை இதுவரை படித்ததில்லை...சரி என்று இதை படித்தால்..எனக்கு என்னவோ மூ.வ உரைதான் மூ.க உரையைவிட எளிதாக இருக்கிறது என்பது என எண்ணம்....நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அதை பின்னோட்டத்தில் சொல்லுங்களேன் :)))
பி.கு. இது சும்மா யாருக்கு என்ன உரை பிடிக்கும் என்பதை தெரிந்துகொள்ள மட்டும்தான்.வேறு எந்த உள்நோக்கமும் இதற்கு இல்லை...அதனால் என கொண்டையை யாரும் தேடவேண்டாம்..அது இருக்குக்கவேண்டிய இடத்தில் பத்திரமாக உள்ளது...

4 comments:

நாமக்கல் சிபி said...

//இது சும்மா யாருக்கு என்ன உறை பிடிக்கும் என்பதை தெரிந்துகொள்ள மட்டும்தான்//

அர்த்தங்கள் அனர்த்தங்கள் ஆவது எழுத்துப் பிழைகளால்தான்!

எவ்வளவு நல்ல விஷயம் - திருக்குறள் மற்றும் அதன் உரை பத்தி எழுதி இருக்கீங்க!

ஆனாலும் தமிழகத்தில் திராவிட கட்சிகள் தயவால்தான் சாராய உறைகள் படுஜோராக விற்பனை ஆயின என்பதும் உண்மை!

தமிழ் said...

சில குறளுக்கு
மூ.வ அவர்களுடையதும்

இன்னும் ஒரு சில குறளுக்கு
கலைஞரின் உரையும்
நன்றாக இருக்கும்

ஒருவரை மட்டும் சொல்லுவதற்கு இல்லை

என்றும் அன்புடன்

திகழ்

Unknown said...

நன்றி நாமக்கல் சிபி அவர்களே...
இப்போது திருத்திவிட்டேன்!!!!!
தங்கள் வருகைக்கு நன்றி!!!

வாங்க திகழ்...தங்கள் வருகைக்கு நன்றி!!!!!

Bharath said...

Sujatha's would also be good. பரிமேல்லழகர் உரை கொஞ்சம் சிக்கலாயிருக்கும்..