Friday, November 16, 2007

காங். சிந்திக்கட்டும்: வீரமணி



இலங்கையில் ஈழத் தமிழர்கள் அந்நாட்டு முப்படையினரால் கொல்லப்படுவதும் துன்பப்படுவதும் 20 ஆண்டுக் காலமாக நிகழ்ந்து வருகிறதே. அவர்கள் பாதுகாப்புக்காகப் போராடுபவர்கள் விடுதலைப்புலிகள் அல்லவா? இந்தப் பிரச்சினைக்கு ஓர் இணக்கமான உடன்பாடு காண முயன்ற ஒருவரது படுகொலைக்காக மனிதாபிமானத்தோடு கண்ணீர் சிந்தி அழுவது எப்படி தேசிய குற்றமாகும் என்பதைக் காங்கிரசார் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்" என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


"தமிழக முதல்-அமைச்சர், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய இரங்கற்பா, எங்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அவர்கள் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட துயரத்தின் காரணமாக இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்தத் தீர்மானத்தினைக் கண்டு உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் இன உணர்வு கொண்ட கோடிக்கணக்கான தமிழர்கள் உண்மையாகவே ரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


ராஜீவ் காந்தி படுகொலையை எவராலும் ஏற்கவே முடியாது. இதன் விளைவுதான் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் ஈழத் தமிழர்கள் அந்நாட்டு முப்படையினரால் கொல்லப்படுவதும் துன்பப்படுவதும் 20 ஆண்டுக்காலமாக நிகழ்ந்து வருகிறதே. அவர்கள் பாதுகாப்புக்காகப் போராடுபவர்கள் விடுதலைப்புலிகள் அல்லவா? இப்பிரச்சினைக்கு ஓர் இணக்கமான உடன்பாடு காண முயன்ற ஒருவரது படுகொலைக்காக மனிதாபிமானத்தோடு கண்ணீர் சிந்தி அழுவது எப்படி தேசிய குற்றமாகும் என்பதைக் காங்கிரசார் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
கண்ணீர் அஞ்சலிக்காக ரத்தக் கண்ணீர் சிந்துகிறோம் என்று சொல்லி, இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் சக்திகளுக்குத் தோழமைக் கட்சியினர் துணை போகலாமா? கண்ணீர் வடிக்கக் கூடாது, ஆனந்தக் கண்ணீர் உகுக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் காங்கிரசார் உருவாக்கலாமா?
வெறும் வாயை மென்றவர்களுக்கு ''இந்த அவலை மெல்லுங்கள்'' என்று தருவதால் என்ன லாபம்? மத்தியில் உள்ள ஆட்சிக்கு மூலக் கல்லாக இருக்கும் தி.மு.க. ஆட்சியை அசைத்துப் பார்த்தால் யாருக்கு நட்டம் - யோசிக்க வேண்டாமா அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதநேயர்கள் மத்தியில் இது எவ்வகையான சிந்தனைகளை எழுப்பும் என்பதையும் காங்கிரசார் சிந்திக்க வேண்டும்."
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்


சரி இந்த விவகாரத்தில் என்னதான் சொல்ல வருகிறார் வீரமணி??காங்கிரஸ் ராஜீவ் கொலையை மறந்து விடவேண்டும் என்கிறாரா,அல்லது ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்காக கண்நீர்வடிப்பது தேசத்துரோகம் இல்லை என்கிறாரா??இனிமேலாவது காங்கிரஸ் விழித்துக்கொண்டு இவரை கைது செய்யவேண்டும்.

Wednesday, November 14, 2007

நீரழிவு நோயில் இந்தியா முதலிடம்??






கடந்த சில வருடங்களாக இந்தியாவில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்த நிலையில் சென்றால் இந்தியா இன்னும் சில வருடங்களில் முதலிடம் பிடிக்கும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 மில்லியன்களாகும்.
நாம் நமது வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவந்தால் இதை தடுக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.




அது பற்றி பார்ப்போம்..


1. முதலில் junk foods எனப்படும் சாப்பாடு வகைகளை உண்பதை குறைக்க வேண்டும்.


2. காலையில் எழுந்ததும் சிறிது தூரம் நடைப்பயிற்சியோ அல்லது உடற்ப்பயிற்சியோ மேற்க்கொள்ளவேண்டும்.


3. 2 மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக இரத்தப்பரிசோதனை செய்துகொள்வது நல்லது.


இந்த இரத்தப்பரிசோதனை செய்துகொள்ள நீங்கள் பரிசோதனை மையத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இப்போது இல்லை. நம் இரத்தத்தில் குளுகோஸ் அளவை காட்டும் கருவி இப்போது வந்துவிட்டது. விலை 1500 ரூபாய். அதை வாங்கி வைத்துக்கொள்வது நலம். இல்லை நம் வீட்டில் நம் அம்மா, அப்பா விற்கு இதை வாங்கி கொடுக்கலாம். வழிமுறைகளும் மிகவும் சுலபம்.


நீரழிவு நோயின் அறிகுறிகள்:



1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்


2. எடை குறைதல்


3. தாகம் எடுத்தல்


4. காயம் ஏற்பட்டால் ஆறாமல் இருத்தல்.


5. சிலருக்கு கண் பார்வை மங்குதல்.



நோய் வருவதை நம்மால் தடுக்க முடியாது ஆனால் தள்ளிபோடலாமே!!!!மேற்சொன்ன வழிமுறைகளை பின்ப்பற்றி இந்த நோயை தள்ளிபோடுவோம் முடிந்தால் விரட்டுவோம்!!!!





கடைசி செய்தி :

இப்போது நீரழிவு நோய்காக இந்தியாவில் ஒரு புதிய மருந்து கண்டுபிடித்துள்ளனர்.அதன் பெயர் Exenatide. இந்த மருந்து நம் உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டி அதிகம் சுரக்க செய்கிறது. இந்த மருந்தின் தாக்கம் 12 மணிநேரம் இருக்குமாம். இது அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tuesday, November 13, 2007

உன்னோடு நான் இருந்த..........


"இருவர்" படமும் பாடல்களும் எத்தனை பேர் பார்த்து கேட்டுருப்பீர்கள் என்று தெரியவில்லை. படமும் பாட்டும் மிக அழகாக இருக்கும். அதில் எனக்கு மிகவும் பிடித்தது படத்தில் வரும் இந்த கவிதை. வைரமுத்துவின் வைர வரிகளில் அட்டகாசமான கவிதை.


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்!!!!
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!!

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைதைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடி!!

பார்வையிலே சில நிமிடம்,
பயத்தோடு சில நிமிடம்,
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்,
இலக்கணமே பாராமல்..
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்,

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்!!!!
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!!

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதைப்பற்றி அறியவில்லை
யார் தொடங்கி? யார் முடிக்க?ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் களைந்தேன் ஆசையினை நீயனைத்தாய்!
ஆடை களைந்தேன் வெக்கத்தை நீயனைத்தாய்!

கண்டதிருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர்....
கையில் இன்னும் ஒட்டுதடி!!!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்!!!! (2)
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!!