Saturday, November 10, 2007

வேல் - விமர்சனம்





என்னுடைய "தீபாவளிக்கு என்ன படம் பாக்கலாம்" பதிவில் இந்த படம் பற்றி மோசமாக எழுதிஇருந்தேன். ஆனால் சூர்யா மற்றும் ஹரி இருவரும் சேர்ந்து என் மண்டையில் நச்சென்று ஒரு குட்டு வைத்ததுபோல் இருந்தது படம்.
வழக்கமான இரட்டைக்குழந்தைகள் கதைதான்!! ஆனால் குடுத்திருக்கும் விதம்?? ஹரி ஒரு பிரமாதமான திரைக்கதை அமைப்பாளர் என்பதை காட்டுகிறது॥



சரண்ராஜ், சரண்யா தம்பதிகளுக்கு இரட்டைகுழந்தைகள் பிறக்க ஒரு குழந்தை இரயிலில் காணாமல் போகிறது. காணாமல் போன குழந்தை நல்லூர் என்ற ஊரில் உள்ள பண்ணையார் நாசரிடம் கிடைக்கிறது. நாசர் அந்த குழந்தைக்கு "வெற்றிவேல்" என பெயரிட்டு வளர்க்கிறார். சரண்யாவிடம் வளரும் இன்னொரு குழந்தை "வாசு" என்ற பெயரில் வளர்கிறது. வேல் என்ற வெற்றிவேல் அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் செல்லமாக இருக்கிறான். நாசரின் ஜென்ம விரோதியான கலாபவன் மணிக்கும் வேலுக்கும் தினமும் சண்டைவர, காரணம் flashback கில் தெரிகிறது. இப்படியிருக்க சென்னையில் இருக்கும் வாசு ஒரு தனியார் துப்பரிவாளராக வேலை செய்கிறார். 7up சுவாதியாக வரும் அசினுடன் காதல் கொள்ள அது இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தத்தில் முடிகிறது.வாசுவிர்க்கு தன்னுடைய அண்ணன் இருக்கும் இடம் அசின்மூலமாக தெரியவர அண்ணனை அழைத்துவர நல்லூர் செல்கிறார். அவர் அண்ணனை அழைத்து வந்தாரா, கலாபவன் மணி என்ன ஆனார் என்பதுதான் மீதி கதை.
சூர்யா நெஜமாகவே மிக நன்றாக நடித்துள்ளார். அவருக்கு எங்கள் ஊரில்( சிவகங்கை) இருக்கும் வரவேற்ப்பை!!!!!! பார்க்கும்போது அவர் ஒரு இடத்தை பிடித்துவிட்டதாகவே தெரிகிறது. இரட்டைவேடத்தில் அவர் காட்டிய வேறுபாடு சூப்பர்!!! அவருக்கும் அசின்னுக்கும் இடையே ரசாயனம் (அதான் Chemistry) நன்றாக உள்ளது. ஆனால் அசின்னுக்கு இந்தப்படத்தில் பெரிய வேலை ஒன்றும் இல்லை. அசின் பார்க்க நன்றாக உள்ளார். அவரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.
வில்லனாக கலாபவன் மணி. அவருடைய நகைச்சுவை கலந்த வில்லத்தனம் புதிதில்லை என்றாலும் ரசிக்க முடிகிறது. நாசருக்கும், அம்பிகாவிர்க்கும்( நாசரின் மனைவி) வேலையே இல்லை. பாட்டியாக வரும் லக்ஷ்மி தான் ஒரு சிறந்த நடிகை என்று காட்டி உள்ளார். எல்லாவற்றுக்கும் மேல் இந்த படத்தில் வடிவேலு இருக்கிறார். அவரை சரியான நேரத்தில் பயன்படுத்தி உள்ளார் இயக்குனர்.
படத்தின் முதல் பாதி வழக்கமாக சென்றாலும் ரெண்டாவது பாதியில் படத்தை தூக்கி நிருத்தயுள்ளது ஹரியின் புத்திசாலித்தனமான திரைகதையும் சூர்யாவின் நடிப்பும்தான். படத்தின் visual effects அட்டகாசம். இரண்டு சூர்யாவும் சேர்ந்து வரும் காட்சிகள் தத்ரூபமாக உள்ளது. ப்ரியன் ஒளிப்பதிவில் புதிதாக எதுவும் செய்யவில்லை.
படத்தின் மிகப்பெரிய மைனஸ் யுவனின் இசை। பாடல்கள் மிகவும் சுமார். பின்னணி இசையும் சுமார் ரகம்தான். இயக்குனர் பாடல்கள் மற்றும் முதல் பாதி திரைகதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் வேல் இன்னொரு சாமி ஆக வந்துருக்கும்.


Anyway, வேல் நிச்சயம் நம்மை போரடிக்காது.


மொத்தத்தில் வேல் வெற்றிவேல்

Friday, November 09, 2007

அழகிய தமிழ் மகன் - விமர்சனம்




விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அழகிய தமிழ் மகன் படம் இன்னிக்கு ரிலீஸ் ஆயிருக்கு. விஜய் - ரகுமான் காம்பினேஷன்ல பாட்டு ஏற்கனவே ஹிட்டானதுனால நான் பயங்கர எதிர்ப்பார்போட போனேன். ஆனா ரிசல்ட்?? அது எதுக்குகன்னா இப்போ!!!!!!!!!

இந்த படத்தில் விஜய் பேரு குரு. இவரு பெரிய ஓட்டப்பந்தய வீரர். இவரு ஒரு மேட்சுக்கு முன்னாடி கோவில்ல ஹீரோஇன பாக்கறாரு, அப்ப ஹீரோயின் எறும்புக்கு சாப்பாடு வைக்கறாங்க, இத பாக்கும் ஹீரோக்கு லவ் வந்துருது!!!! (எப்பா இப்பவே கன்னகட்டுதே)இதுக்கு அப்பறம் ஒரு ரெண்டு பாட்டு பாடறாரு ஹீரோ!!!

இவங்க காதல் ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சு எல்லாரும் சம்மதிசுர்றாங்க!!!! என்னடா இன்னும் இண்டேர்வலே வரலியே அதுக்குள்ள படம் முடியபோகுதானு பாத்தா அங்கதான் கதையில ஒரு திருப்புமுனை!!! ஹீரோக்கு ESP power இருக்கு. ESP னா Extra-Sensory Perception னு அர்த்தம் அதாவது பின்னால நடக்கபோரத முன்னாடியே தெரிஞ்சுகுற சக்தி.இருக்கறது தெரியுது...அப்பாடி இனிமே படம் நல்லா போகும்னு பாத்தா ஒண்ணும் ஆகல!!!!!!!!

இந்த பவர்ல விஜயே ஷ்ரேயாவ கொலபன்றமாதிரி தெரியுது, ஒடனே ஹீரோ மெர்சலாகி மும்பைக்கு போறாரு அங்க பாத்தா இன்னொரு விஜய்!!! அடடா அப்போ நமால கொல்ல போறவன் இவந்தான்னு அவன பிடிக்க போகறப்ப இவருக்கு ஆக்சிடண்ட்!!! அந்த கேப்புல அந்த விஜய் ஷ்ரேயாகிட்ட போய் சேர்ந்துடுராறு...குரு எப்படி மறுபடியும் ஹீரோயினோட join ஆறாறு...இத தான் 3 மணி நேரம் சொல்லிருக்காங்க!!!!!

இது ஒரு நல்ல கதைதான், ஆனா படுமோசமான திரைக்கதை நம்ம பொறுமைய ரொம்ப சோதிச்சுருச்சு!!!!!படம் ஆரம்பிச்சு 1 மணிநேரம் வரை படம் எங்க போகுதுன்னு தெரியல। அப்பறமா கதைக்கு வந்து interval வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு!!!!

விஜய் எப்பதான் நடிக்க போறாரோ தெரியல। நேத்து வந்த ஜீவா கூட நடிபிலையும் நல்ல கதை தேர்ந்துஎடுகுரதுளையும் கலக்குறாரு ஆனா விஜய்?? சீக்கரம் தன்னோட வழிய மாத்தலேன்னா ரொம்ப கஷ்டம். அந்த இன்னொரு விஜய், அவர பாக்கும்போதெல்லாம் நம்மக்கு செம கடுப்பு வருது!!!எப்போபார்த்தாலும் ஒரு துள்ளலோட நடை அவர் பண்ற கொனாங்கி சேட்டை எல்லாம், sorry lts very boring.

ஹீரோயின் ஷ்ரேயா வழக்கம் போல நடிக்க வேலையே இல்ல!!! வந்து டான்ஸ் ஆடிட்டு போறாங்க!! நமீதா அதுக்கு மேல, ரெண்டாவது விஜய் நமிதாவ train ல மீட் பண்ணுவாரு ஒடனே ஒரு பாட்டு நமீதா லவ் பண்ண ஆரம்பிச்சுருவாங்க அப்பறம் ----------- நடந்துரும்। அவ்ளோதான் அதுக்கு அப்புறம் நமிதாவ காட்டவேமட்டாங்க. climax ல நமீதா pregnant ஆகி அந்த விஜய பாத்து அவரோட சேந்துருவாங்க.இப்படி ஒரு அபத்தக்கலஞ்சியம் எந்த படத்துலயும் இல்ல. கருமம் கருமம்.Ashish Vidhyaarthi and Saayaji shinde ரெண்டு பேருக்கும் ஒண்ணும் இல்ல நடிக்க.

விஜய் சொந்தமா கதை கேட்டு நடிச்சா எப்படி இருக்கும் ? ATM மாதிரிதான் இருக்கும்।இனிமே Mahesh babu படத்தையும் ரீமேக் பண்ணமுடியாது. பேசாம hindi, malayalam nu try பண்ணிபாக்கலாம்.

சரி அப்ப படம் எப்படி இருக்கு?? இதுக்குமேல அதசொல்லனுமா என்ன??

Tuesday, November 06, 2007

கில்லி போயி பைரவி வந்தது டும் டும் டும்!!!!!!

ஞாயிற்றுகிழமை ஒரு செம காமெடி நடந்தது, அத எத்தனபேரு பாத்தீங்கன்னு தெரியல.அதான் நம்ம சன் டி.விக்கும் கலைஞர் டி.விக்கும் நடந்த "டிஷ்யூம் டிஷ்யூம்" தான் அது.


நான் கொஞ்சம் விரிவாவே சொல்றேன்.




சன் டி.வில சண்டே மத்யானம் திடீர்னு ஒரு நியுஸ் போட்டான், என்னனு பாத்தா "தமிழ்நாடு அரசு விருது வழங்கும் விழா இன்று பகல் 11.30 க்கு காணத்தவராதீர்கள்" அப்படீன்னு. என்னடா இது விருது வழங்கின விழாவ கலைஞர் டி.வி தான் தீபாவளி அன்னிக்கு போடபோராங்களே பின்ன இவங்க எப்படி போடுவாங்கனு பாத்தா கரெக்டா 11.30 க்கு போட்டான்.சரின்னு நம்ம தானைத்தலைவி நமீதாவோட ஆட்டத்த வாயபோலந்து பாத்துட்டே இருந்தேன். அப்பறம் ஏதேச்சயா கலைஞர் டி.வி பக்கம் போனா அங்க நம்ம இளைய தளபதி!!!! "ஆச்சு வூச்சு னு ஓடி வராரு". அடடா கில்லி படம் கலைஞர் டி.வி ல போடறாங்களே னு பாக்க ஒக்காந்துட்டேன். அது எனக்கு ரொம்ப புடிச்ச படம் வேறயா, பயாங்கரமா ரசிச்சு பாத்துட்டு இருந்தேன். ஒரு அறைமணி நேரம் ஓடிச்சு படம் திடீர்னு கில்லி போயி பைரவி படம் வந்துருச்சு, என்னடா இது கொடுமைனு சன் டி.வி போயி நம்ம தலைவியவே பாப்போன்னு போனா அங்கயும் விழா நிகழ்ச்சிய கட் பண்ணிட்டு நந்தா படம் போட்டுட்டான். என்ன பிரச்சனை னு யோசிச்சு யோச்சிசு மண்டை கொழம்பி போச்சு. அப்பறம் நம்ம தோஸ்து ஒருத்தன் தான் எல்லா மேட்டரையும் சொன்னான். அட வெண்ணைகளா ஒங்க சண்டைல ஏண்டா எங்கள போட்டு கொல்றீங்கனு தோணுச்சு.
அவசரகுடுக்க தானமா படத்த போட்டு நல்லா வாங்கி கட்டிகுச்சு சன் டி.வி. என்ன இருந்தாலும் இராஜதந்திரத்தை கரைத்து குடித்தவர் அல்லவா கலைஞர்!!!




பி.கு: படிச்சவுடன் தயவுசெய்து கமெண்ட் எழுதுங்க!!!!!

Monday, November 05, 2007

கருணாநிதியும் விடுதலைப்புலி ஆதரவும்!!!

கலைஞர் எப்போதுமே விடுதலைப்புலி ஆதரவாளர்தான். அது இப்போ இன்னும் ஒரு தடவை வெளிச்சத்துக்கு வந்துருக்கு. போன வெள்ளிக்கிழமை இலங்கை அரசு செய்த வான்வெளி தாக்குதலில் விட்தளைப்புலிகளின் அரசியல் பிரிவு ஆலோசகர் சு.ப.தமிழ்செல்வன் கொல்லப்பட்டார். இதை கண்டித்து கலைஞர் ஒரு இரங்கல் கவிதை எழுதி பத்திரிகைகளுக்கு கொடுத்தார். இது தான் இப்போது சூடுபிடித்து உள்ளது. ஜெயலலிதா உடனே ஒரு கண்டன அறிக்கை கொடுத்தார், அதில் "எப்படி ஒரு மாநில முதல்வர் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் பிரதிநிதிக்கு ஆதரவாக எப்படி கருத்து கூறலாம் என்று கேட்டுள்ளார். மேலும் இதன் மூலம் கருணாநிதி அரசியல் சாசன விதிமுறைகளை மீறிவிட்டார் அதனால் மத்திய அரசு கருணாநிதி தளமைலான அரசை கலைத்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்" என்று கேடுகொண்டுள்ளார்.

இதில் ஜெயலலிதா தான் ஒரு தீவிரவாதிகளின் விரோதி என்று மீண்டும் ஒரு முறை சொல்லாமல் சொல்லி விட்டார். நியாயமாக மத்தியஅரசு கருணாநிதிஇடம் கேள்வி கேட்கவேண்டும் ஆனால் கண்டிப்பாக எதுவும் கேட்காது.தங்கள் தலைவரைக்கொன்ற இயக்கத்தை ஆதரிக்கும் ஒரு தலைவரை கூட்டணியில் வைத்துக்கொண்டு அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஒரு கட்சயிடம் நாம் இதைஎல்லாம் எதிர்பார்க்க முடியாது. :) எப்போது தான் காங்கிரஸ் கும் அதன் தலைவர்களுக்கும் முதுகெலும்பு வருமோ!!! ஒரு தேசிய கட்சியின் நிலைமை இப்படியா சீரழிய வேண்டும்.

என்ன கொடுமை சார் இது!!!!

என்ன படம் பாக்கலாம் தீபாவளிக்கு!!! 2



2. பொல்லாதவன்

சூப்பர் ஸ்டாரோட மருமகன் நடிச்சு ரிலீஸ் ஆகபோறபடம்.ஜோடி குத்து ரம்யா( இப்போ திவ்யா). ஜி.வீ.பிரகாஷ் மியூசிக் ல பாட்டுஓகே. எனக்கு என்னமோ இந்த படம் கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோணுது



3 .கண்ணாமூச்சி ஏனடா!!!!


"கண்டநாள் முதல்" டைரக்ட் பண்ணின ப்ரியாவோட செகண்ட் வென்ச்சர் இது.ராதிகா தான் தயாரிப்பாளர். பிரித்விராஜ் அண்ட் சந்த்யா லீட் ரோல்ல நடிக்குறாங்க.சத்யராஜ் கூட இந்த படத்துல வயசுக்கு ஏத்த ரோல்ல நடிக்குறார். பட ஸ்டில்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. கண்டநாள் முதல் மாதிரி இந்த படமும் ஹிட் ஆகுமா??




4 வேல் :


இது சூர்யா நடிச்சு ஹரி டைரக்ட் பண்ணி ரிலீஸ் ஆகபோற படம். இன்னும் ஒரு தாமிரபரணி மாதிரி இருக்கு. பாட்டும் சுமார்தான். இது ஓடும்னு சுத்தமா நம்பிக்கை இல்ல.



5. மச்சக்காரன்:


இதுல ஜீவன் காம்னா இருக்காங்க. காம்னா இதயத்திருடன் படத்துக்கு அப்பறம் நடிக்கும் படம். இந்த படத்துல லிப் கிஸ்லாம் இருக்கு சொல்றாங்க. ஜீவன் நெஜமாவே மச்சக்காரன் தான்( வயித்தெரிச்சல் தான் வேற என்ன).