Friday, September 05, 2008

Online Advertising ஒரு எளிய அறிமுகம் 1


Online advertising என்பது ஒரு பணம் கொழிக்கும் துறை. பணம் என்றால் கோடிகளில்.
நான் இந்த துறையில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இருப்பதால் எனக்கு தெரிந்த வரையில் இதை பற்றி விளக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.

நான் இந்த துறைக்கு வந்ததே ஒரு விபத்துதான்!!! என்னடா எல்லா சினிமா மக்கள் மாதிரி சொல்றானேன்னு நினைக்காதீங்க. சத்தியமா நான் வேலைக்கு சேரும் வரை இதை பற்றி ஒன்றுமே தெ
ரியாது. அவ்வளவு ஏன் இதை பற்றி நான் கேள்விபட்டதுகூட இல்லை.இந்த துறையில் சேர்ந்தவுடன் தான் இதன் வீ
ரியமும் இதன் மார்கெட் வால்யுவும் புரிந்தது!!!

எப்படி ஒரு பத்திரிக்கை, தொலைக்காட்சி சானல் நடத்த விளம்பர வருவாய் முக்கியமோ அவ்வளவு மிக்கியம் ஒரு இணையதளம் நடத்துவதற்கும். இதில் வரும் வருமானத்தை கொண்டு தான் மற்ற செலவுகளை அது செய்யும்.
எடுத்துகாட்டாக ஒரு நாளிதழில் முதல் பக்கம் விளம்பரம் செய்ய வேண்டுமானால் நிறைய செலவாகும், அதேபோல் T.V யில் Prime Time வரும் விளம்பரங்கள் அதிக விலை போகும். ஏன் அதற்கு மட்டும் அவ்வளவு விலை?
உங்களுக்கே விடை தெரியும் " முதல் பக்கத்தில் வரும் விளம்பரமும், prime time மில் வரும் விளம்பரத்திற்கும் அதிக பார்வையாளர்க
ள் கிடைப்பார்கள்".
இதே தான் இணையதளத்திற்கும். 
இவர்கள் தங்களின் Homepage ஐ பல slot களாக டிசைன் செய்து ஒவ்வொரு ஸ்லாட்டும் ஒவ்வொரு விலையில் விற்பார்கள். இந்த விலை அந்த இணையத்தளத்தின் மற்ற பக்கங்களின் விலையை விட அதிகமாக இருக்கும்.

ஆனால் இதுவும் நேரத்துக்கேற்ப மாறும். இப்போது ஒரு கிரிகெட் மேட்ச் நடக்கிறது என்று வைத்துகொள்வோம் அந்த நேரத்தில் முக்கால்வாசி மக்கள் அந்த இணையத்தின் விளையாட்டு பக்கத்திற்கு தான் செல்வார்கள் எனவே விளையாட்டு பக்கத்திற்கு அன்று மவுசு அதிகமாக இருக்கும்.
கீழே இருக்கும் Screenshot பார்த்தால் உங்களுக்கு புரியு
ம் இங்கே நான் சிகப்பு கட்டம் கட்டி இருப்பதுதான் விளம்பரம்.


வரும் பதிவுகளில் எப்படி இந்த விளம்பரங்கள் வருகின்றன அதன் தொழில்நுட்பம் என்ன என்பன பற்றி பார்போம்!!!!!

தங்களின் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள் :))))

Tuesday, September 02, 2008

என் மும்பை வாழ்க்கை!!!!


இன்றுடன் மும்பை மாநகருக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது!!!!!




சென்னையில் ஒரு சின்ன கம்பெனியில் போட்டி தட்டி கொண்டிருந்த நான் இப்போது மும்பையில் ஒரு பெரிய பன்னர்வ கம்பெனியில்...
என் பழைய கம்பெனியில் அமெரிக்க மேரத்தில் வேலை செய்தாலும், இது மிகவும் பெரிய கம்பெனி என்பதாலும் எவ்வித தயக்கமும் இல்லாமல் மும்பை வந்துவிட்டேன்.

நான் வந்தது ஜூலை மாதம் மும்பையில் மழை மிக அதிகம் இருக்கும் என்று சொன்னார்கள்.அதைபோலவே என் பிளைட்டும் மழை காரணமாக 3 மணிநேரம் தாமதம்.என்னடா இது என்று நொந்து நூடுல்ஸ் ஆகி என் அத்தை வீட்டிற்கு வந்தேன்.இங்கு ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா நான் சென்னையில் என் நண்பர்களோடு தான் தங்கியிருந்தேன் ஆனால் மும்பையில் என் அதை வீட்டில் தான் தங்க வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு.

அடுத்த நாளே இங்கு வேலையில் சேரவேண்டும். காலையில் ஒரு டாக்ஸி பிடித்து (அத்தையின் துணையுடன் தான்) அலுவலகம் வந்து சேர்ந்தால் நானும் செச்குரிடியும் தான் வந்துருக்கோம். அப்போ மணி 9:30. என்னடா இது யாரையும் காணோம்னு பார்த்தால் ஆடி அசஞ்சு 10:30 மணிக்கு மேலதான் வராங்க எல்லாம்.
எனக்கு செம குஷி.ஆகா இதுவல்லவோ கம்பெனி னு. எனக்கான ஆப்பு இருந்தது என் கண்ணுக்கு அப்போ தெரியல...

சரி மும்பைய பத்தி எழுத வந்துட்டு எங்கயோ போயிட்டேன் ஸாரி!!!!!!!!
அலுவலகம் வந்ததும் என் கண்ணுல பட்டது என்ன தெரியுமா?


அடுத்த பதிவுல சொல்றேன்!!!!! :)))))))