Showing posts with label jayallitha. Show all posts
Showing posts with label jayallitha. Show all posts

Monday, November 05, 2007

கருணாநிதியும் விடுதலைப்புலி ஆதரவும்!!!

கலைஞர் எப்போதுமே விடுதலைப்புலி ஆதரவாளர்தான். அது இப்போ இன்னும் ஒரு தடவை வெளிச்சத்துக்கு வந்துருக்கு. போன வெள்ளிக்கிழமை இலங்கை அரசு செய்த வான்வெளி தாக்குதலில் விட்தளைப்புலிகளின் அரசியல் பிரிவு ஆலோசகர் சு.ப.தமிழ்செல்வன் கொல்லப்பட்டார். இதை கண்டித்து கலைஞர் ஒரு இரங்கல் கவிதை எழுதி பத்திரிகைகளுக்கு கொடுத்தார். இது தான் இப்போது சூடுபிடித்து உள்ளது. ஜெயலலிதா உடனே ஒரு கண்டன அறிக்கை கொடுத்தார், அதில் "எப்படி ஒரு மாநில முதல்வர் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் பிரதிநிதிக்கு ஆதரவாக எப்படி கருத்து கூறலாம் என்று கேட்டுள்ளார். மேலும் இதன் மூலம் கருணாநிதி அரசியல் சாசன விதிமுறைகளை மீறிவிட்டார் அதனால் மத்திய அரசு கருணாநிதி தளமைலான அரசை கலைத்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்" என்று கேடுகொண்டுள்ளார்.

இதில் ஜெயலலிதா தான் ஒரு தீவிரவாதிகளின் விரோதி என்று மீண்டும் ஒரு முறை சொல்லாமல் சொல்லி விட்டார். நியாயமாக மத்தியஅரசு கருணாநிதிஇடம் கேள்வி கேட்கவேண்டும் ஆனால் கண்டிப்பாக எதுவும் கேட்காது.தங்கள் தலைவரைக்கொன்ற இயக்கத்தை ஆதரிக்கும் ஒரு தலைவரை கூட்டணியில் வைத்துக்கொண்டு அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஒரு கட்சயிடம் நாம் இதைஎல்லாம் எதிர்பார்க்க முடியாது. :) எப்போது தான் காங்கிரஸ் கும் அதன் தலைவர்களுக்கும் முதுகெலும்பு வருமோ!!! ஒரு தேசிய கட்சியின் நிலைமை இப்படியா சீரழிய வேண்டும்.

என்ன கொடுமை சார் இது!!!!