Showing posts with label காங்கரஸ். Show all posts
Showing posts with label காங்கரஸ். Show all posts

Tuesday, December 25, 2007

மாவீரன் நரேந்திர மோடி!!!!!!!!!



நாடே எதிர்ப்பார்த்த குஜராத் மாநில தேர்தல் முடிந்து நாட்டில் உள்ள அனைத்து மீடியா மற்றும் எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படும் நரேந்திர மோடி மீண்டும் முதல்வராக இன்று பதவியேற்றார்.


ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று குஜராத்தின் மன்னராக வலம்வரும் மாவீரன் மோடிக்கு என் வந்தனம்!!!


கடந்த 6 வருடங்களில் குஜராத்தின் வளர்ச்சி விகிதம் 3% அதிகரித்து உள்ளது. இது இந்தியாவின் எந்த மாநில முதல்வரும் தன் மாநிலத்தை இந்த அளவு உயர்த்தியதில்லை. தற்பொழுது குஜராத்தின் மொத்த வளர்ச்சி விகிதம் 11.5 சதவிகிதம்.


இவ்வளவு செய்துள்ள ஒரு முதல்வரை எதிர்க்க காங்கரஸ் மற்றும் சில அறிவுஜீவி பத்திரிகைகாரர்களுக்கு வேறு எந்த விஷயமும் இல்லாத காரணத்தால் "புளித்து போன" இந்துத்த்வா கோஷத்தை கையிலெடுத்தார்கள். ஆனால் குஜராத் மக்கள் மிகவும் புத்திசாலிகள் தங்கள் மாநில வளர்ச்சிக்கு யார் காரணம் மற்றும் யார் வந்தால் இன்னும் சிறப்பாக வளர்ச்சி பெரும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவெடுத்துள்ளார்கள்.


இனியாவது காங்கரஸ், கம்யுனிஸ்ட்கள் எல்லாம் மோடியை கரித்து கொட்டிகொண்டே இருக்காமல் அவரிடம் நிர்வாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.முதல்வன் படத்தில் சுஜாதா ஒரு வசனம் எழுதியிருப்பார் " அடுத்தவன எப்படி கவுகரதுன்னு செலவழிக்கிற மூளைல ஒரு கால் பங்கு நாட்டுக்கு என்ன பண்ணலாம்னு செலவழிச்சா நம்ம நாடு என்னிக்கோ முன்னேரிருக்கும்"இந்த வசனம் அனைத்து எதிர்கட்சிகளுக்கும் பொருந்தும்.


சரி இந்த தேர்தலில் மோடி தோற்றிருந்தால் என்ன நடந்திருக்கும்?


1 . காங்கிரஸ் இது மதவாதிகளுக்கு குஜராத் மக்கள் அடித்த சாவுமணி என்று அறிக்கை விடுக்கும்.


2. கம்யுனிஸ்ட்களின் வெத்து மிரட்டலுக்கு அஞ்சாமல் தனகிருக்கும் செல்வாக்கை மனதில்கொண்டு செயல்பட்டிருக்கும்.


3. ராகுல்காந்தி ஒரு சிறந்த தலைவராக வளர்ந்திருப்பார். அடுத்த மக்களவை தேர்தலில் அவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டுருக்கும்.


நாம் செய்த புண்ணியம், இந்த கொடுமைஎல்லாம் நடக்காமல் நம்மை காப்பாற்றிய குஜராத்திகளுக்கு நாம் நிச்சயம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்!!!


அனைத்திலும் பெரிய காமெடி என்னன்னா அது ராகுல்காந்தி தான். பாவம் அவர் பிரசாரம் பண்ணிய உ.பி, குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் அடைந்தது படு தோல்வி!!!!! இது ராகுலின் பப்பு இனிமேல் வேகாது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பாவம் ராகுலின் நிலைமை இப்போது சற்று கலவரம் தான்!!!